ஓபிஎஸ் செல்லாத நோட்டு என்ற ராஜன் செல்லப்பா கருத்துக்கு, ஈபிஎஸ் ஒரு கள்ள நோட்டு என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பதிலளித்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளரான கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்த போது, ஈபிஎஸ் ஆதரவாளர் ராஜன் செல்லப்பா "ஓபிஎஸ்" பற்றி "செல்லாத நோட்டு" எனத் தவறாக பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி தான் "கள்ள நோட்டு" என பதிலடி தந்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் கோவை செல்வராஜ் பேசியது, "கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி வருகையின் போது எடப்பாடி பழனிச்சாமி மோடியுடன் ஆங்கிலத்தில் பேசியதை ஆர்.பி.உதயகுமார் மிகவும் பெரிதாக பேசுகின்றனர். ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் பேசியதை ஈபிஎஸ் பெரிய தலைவராக பேசுகின்றனர். நவம்பர் 11ஆம் தேதியுடன் தற்காலிக பொதுச் செயலாளரான இபிஎஸ் பதவி காலாவதி ஆகி உள்ளது. பொதுச் செயலாளர் பதவியும் மற்றும் இணைய ஒருங்கிணைப்பாளர் பதவியும் இரண்டும் காலாவதி ஆகி உள்ளது. தற்பொழுது அவர் எந்த பகுதியில் இல்லை. ராஜன் செல்லப்பா, ஓபிஎஸ் அவர்களைப் பற்றி செல்லாத நோட்டு என்று தவறாக பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி தான் கள்ள நோட்டு.