குன்றத்தூர் அருகே உள்ள சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் தக்ஷசிலா எனும் தலைப்பில் தொழில்நுட்பம் மற்றும் பண்பாடு சார்ந்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி, இளையராஜா தனது புது ஸ்டியோவில் முதன் முதலில் தான் நடித்த விடுதலை படத்தின் பாடலுக்கு இசையமைத்ததாக பெருமிதம் தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் இசைஞானி இளையராஜா தனது 45 ஆண்டு கால இசைப் பயணத்தில் கதாநாயகனை அருகில் வைத்து கொண்டு ட்யூன் போடுவது இதுவே முதன்முறை என தன்னிடம் கூறியதாக சூரி நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.